Published : 14 Jan 2014 10:51 AM
Last Updated : 14 Jan 2014 10:51 AM

சபரிமலையில் இன்று மகர ஜோதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ல் நடை திறக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. இன்று மாலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளனர். மகர விளக்கு பூஜையையொட்டி பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் திருவாபரணங்கள், இன்று மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x