Published : 20 Jun 2015 05:38 PM
Last Updated : 20 Jun 2015 05:38 PM

பொதுசெயல்திட்டம் கொண்ட அணி தேவை: முத்துகிருஷ்ணன்

செய்தி:>2016 பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திட்டவட்டம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் முத்துகிருஷ்ணன் கருத்து:

நல்ல வரவேற்கத்தகுந்த முடிவு, தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சிமுறையின் மூலம் ஆளுங்கட்சியினரின் ஊழல், அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, அவர்களே நேரடியாகவும் பினாமிகள் மூலமும் மணற்கொள்ளை, குளம் குட்டைகளில் மண்ணை சுரண்டுவது, பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுவந்தனர்.

கீழமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை 5 ஆண்டு காலத்தில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டி செட்டிலாகிவிட்டு தேர்தல்களில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். நல்லவர்கள் யாரும் தேர்தல் பக்கமே அரசியல் பக்கமே தலைவைத்து படுக்கமுடியாத நிலைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள்.

அரசியலில் நேர்மைக்கு இடமில்லை என்ற நிலையை மாற்ற வெற்றி தோல்வி எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து ஒரு பொதுசெயல்திட்டத்தை வகுத்து ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு மாற்று அணி இன்று அவசியம், திருமாவளவன், ஜிஆர் போன்றவர்கள் இதற்காக தீவிரமாக முயற்சி எடுத்து களம் அமைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x