Published : 15 Mar 2014 12:01 PM
Last Updated : 15 Mar 2014 12:01 PM

குஜராத் உண்மை நிலவரத்தை தெரிவிக்க ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா?- கேஜ்ரிவால்

குஜராத் உண்மை நிலவரம் குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

சச்சரவான கருத்துக்களுக்கு பெயர்போன ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், ஊடகங்கள் அனைத்தும் பெரும் தொகைகளுக்கு விலைபோய் விட்டதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து எழுந்த கடும் எதிர்ப்பினால் பின்னர் தான் அப்படிக் கூறவில்லை என்றும் அவர் பின்வாங்கினார்.

இந்நிலையில், பெங்களூருவில் இன்று சாலை பிரச்சாரத்தை துவக்கும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், "குஜராத் உண்மை நிலவரம் குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்த உண்மைத் தகவல்களை மக்கள் முன் ஊடகங்கள் கொண்டு வரவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x