Last Updated : 22 Nov, 2013 10:37 AM

 

Published : 22 Nov 2013 10:37 AM
Last Updated : 22 Nov 2013 10:37 AM

1950-க்களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்

1954 - சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி

(1878 டிசம்பர் 10- 1972 டிசம்பர் 25)

தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். முதல் பாரத ரத்னா விருதை பெற்ற பெருமைக்குரிய அவர், சென்னை மாகாண பிரதம மந்திரி, நாட்டின் முதல் கவர்னர்-ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், சென்னை மாகாண முதல்வர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.

1954 - சர் சந்திரசேகர வெங்கடராமன்

(1888 நவம்பர் 7 - 1970 நவம்பர் 21)

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இயற்பியல் துறை விஞ்ஞானி. “ராமன் விளைவு” என்ற அவரது ஒளிச் சிதறல் ஆய்வுக்காக 1930-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1954- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

(1888 செப்டம்பர் 5 - 1975 ஏப்ரல் 17)

நாட்டின் 2-வது குடியரசுத் தலைவர். தமிழகத்தைச் சேர்ந்த அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1955- பகவான் தாஸ்

(1869 ஜனவரி 12 - 1958 செப்டம்பர் 18)

உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். சம்ஸ்கிருதம், ஹிந்தியில் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

1955- ஜவஹர்லால் நேரு

(1889 நவம்பர் 14 - 1964 மே 27)

நாட்டின் முதல் பிரதமர். சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர். மிகச் சிறந்த ஆங்கில நூலாசிரியரும்கூட. அவரது பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1955- சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா

(1860 செப்டம்பர் 15 – 1962 ஏப்ரல் 14)

கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பொறியாளர். கிருஷ்ணராஜ சாகர் அணை, மைசூர் சிவசமுத்திரத்தில் உள்ள ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் ஆகியவை இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை. அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தேசிய பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1957- கோவிந்த் வல்லப் பந்த்

(1887 செப்டம்பர் 10 – 1961 மார்ச் 7).

உத்தர பிரதேசத்தின் முதல் முதல்வர். சுதந்திரப் போராட்டத் தலைவர். இந்தியை ஆட்சி மொழியாக்குவதில் அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

1958- தோண்டோ கேசவ் கார்வே

( 1958 ஏப்ரல் 18 – 1962 நவம்பர் 9)

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி. மகளிர் நலனுக்காக தீவிரமாகப் போராடியவர். விதவையை மணம் முடித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x