Published : 04 Aug 2018 08:07 AM
Last Updated : 04 Aug 2018 08:07 AM
திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி இலங்கையிலும் பிரார்த்தனை நடைபெறுவதாக அந்நாட்டு சமூக அபிவிருத்தித் துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு மாநில, தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.
வெளிநாட்டில் இருந்தும் கரு ணாநிதி நலம்பெற வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார்.
இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை நாடா ளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஜுலை 30-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனைக்குச் சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தை நேரில் வழங்கினர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள ஹட்டனில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கூறியதாவது: கருணாநிதி குண மடைந்து மீண்டும் மக்கள் பணி களைத் தொடர வேண்டும் என இலங்கையில் மலையகப் பகுதி களில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT