Published : 06 Jun 2018 08:29 AM
Last Updated : 06 Jun 2018 08:29 AM

பெட்ரோல் விலையை குறைத்ததால் மிச்சமான 9 பைசாவை பிரதமருக்கு அனுப்பிய இளைஞர்

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. கடந்த சில நாட்களாக 5 பைசா, 6 பைசா என சொற்ப அளவில் மட்டுமே விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானா இளைஞர் ஒருவர் தனது கோபத்தை புதிய முறையில் வெளிப்படுத்தியுள்ளார். ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த சந்து கவுட் என்ற அந்த இளைஞர், மாவட்ட மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது ஆட்சியர் கிருஷ்ண பாஸ்கரிடம், பெட்ரோல் விலையை குறைத்ததால் மிச்சமான 9 பைசாவுக்கான காசோலையை கொடுத்து, இதை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி விடுமாறு கூறினார். இதை ஆட்சியரும் பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x