புரட்சி வரிகள்

புரட்சி வரிகள்
Updated on
1 min read

தன் பெயருக்கு ஏற்றார்போல தன் கவிதைகளுக்கு வார்த்தைகளை எங்கும் தேடிப் போகாதவர் நாமக்கல் கவிஞர்.

தன் வீட்டில், தெருவில், கிராமத்தில் குழந்தை முதல் வயதானவர்கள் வரை பேசும் வட்டார வார்த்தைகளையே அணிகலன்களாய் கோத்தவர்.

அவரைப் போல வறுமையையும் புரட்சியையும் கலந்து சொன்ன கவிஞர்கள் வெகு சிலரே. “வெள்ளைச் சோறு எங்கள் கனவு” என்பது கவிதையல்ல, யதார்த்தம். ”ஒன்றுமே கிடைக்காதபோது களிமண் உருண்டையை வாயில்போட்டு தண்ணீர் குடிக்கிறோம், அதுவும் ஜீரணித்துவிடுகிறது” என்றால் பசியின் கொடுமையைப் பறைசாற்ற வேறு வார்த்தைகளே அந்த கவிதைக்குத் தேவையில்லை.

- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in