பாமரனின் கதி என்ன?

பாமரனின் கதி என்ன?

Published on

உ.பி-யில் பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை என்று பார்க்க வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்களிடம் வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்களே கொள்ளையர்களாகவும் கொலை காரர்களாகவும் மாறுவது மிகப்பெரும் கொடுமை. இவர்களின் கொள்ளையை வெளி உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டினால் தொடர்வது… அவதூறு வழக்குகள், கொலைவெறித் தாக்குதல் போன்றவையே. ஜனநாயக அமைப்பின் நான்காவது தூண் என சிறப்பித்துப் பேசப்படும் பத்திரிகையாளர்களுக்கே இந்தக் கதி எனில், பாமரனின் கதி என்னாவது?

- சசிபாலன்,இணையம் வழியாக…

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in