கல்விமுறையின் தோல்வி

கல்விமுறையின் தோல்வி
Updated on
1 min read

பேராசிரியர் தொ. பரமசிவம் நேர்காணல் முக்கியமான பதிவு.

தமிழ்ச் சமூகப் பண்பாட்டில், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் அடுத்த தலைமுறை இல்லை.

அதற்குப் பல காரணங்களைக் கூறலாம் என்றாலும், நம் கல்வி முறையின் தோல்வி முக்கியமான காரணம். நம் தமிழ்ச் சூழலில் சமூகவியலாளர்களும், மானுடவியலாளர்களும் செய்ய வேண்டியதை, தமிழ் இலக்கியவாதிகளே செய்திருக்கிறார்கள்.

இன்று இலக்கிய, சமூகப் புலம் சார்ந்த ஆய்வுகளில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதைவிட, அதுகுறித்த எந்த வருத்தமும் இல்லாமல் இருக்கிறோம் என்பது அதைவிட வேதனையானது.

- ச. பூபதிநரேந்திரன்,சமூகவியலாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in