புகையிலையும் புற்றுநோயும்

புகையிலையும் புற்றுநோயும்
Updated on
1 min read

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேரின் இறப்புக்கு புகையிலை காரணமாக இருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை.

ஆனால், பீடி, புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரமில்லை என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார்.புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் எச்சரிக்கை படத்தின் அளவை அதிகரிக்கப்போவதில்லை என்கிறது மத்திய அரசு.

இது வருத்தமளிக்கிறது. புகையிலைக்கு எதிரான யுத்தத்தைத் தீவிரப்படுத்திப் புற்றுநோயிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து அரசு தவறக் கூடாது.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in