சென்ட்ரல் சிரமங்கள் : உண்மையானப் பதிவு

சென்ட்ரல் சிரமங்கள் : உண்மையானப் பதிவு
Updated on
1 min read

ராணிப்பேட்டை ரங்கன் எழுதிய ‘சோதனை மேல் சோதனை வேண்டுமடா சாமி’ பல உண்மைகளைப் பதிவுசெய்தது. சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டுமல்ல;

பெருநகரங்களில் எல்லா இடங்களிலும் போக்குவரத்து நெரிசல்தான். மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் வாகனங்களின் பெருக்கம் ஒரு காரணம் இதுவல்லாமல் சாலை மற்றும் தெரு வளைவுகளில் பல்வேறு வகையான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால், தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் திணறுகின்றன. குடியிருப்பவர்களும் இரவு நேரங்களில் நிரந்தரமாக வண்டியை ஆங்காங்கே நிறுத்திவிடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கட்டுமான நிறுவனங்கள் தெருக்கள், சாலைகளில் மணல், ஜல்லி, கம்பிகளை கொட்டி வைக்கிறார்கள். இதனால் பல விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்திய குடிமகக்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே, சிந்தித்து செயல்படுவது நல்லது.

- ராமன்,‘தி இந்து’ இணையதளத்தில்…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in