தலைமறைவும் தலைகுனிவும்

தலைமறைவும் தலைகுனிவும்
Updated on
1 min read

குற்றவாளிகளைத் தேடிப்பிடிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் அவலம் புதுச்சேரியில் நடந்திருக்கிறது, அதுவும் சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்!

சமூகப் பொறுப்புடன் இயங்க வேண்டிய காவல் துறையில் இப்படியான நபர்கள் இருப்பது சமூகத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிப்பதுடன் நின்றுவிடாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கைதுசெய்து நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்.

- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in