விவசாயத்தை வளர்த்தெடுப்போம்

விவசாயத்தை வளர்த்தெடுப்போம்
Updated on
1 min read

தொழில் துறை பெருகுவதற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது சரியல்ல. (‘ஏழை விவசாயிகளின் குரல் கேட்கிறதா?’ கட்டுரை).

விவசாயத்துக்குப் பயனற்ற மானாவாரி நிலங்களைத் தொழில் துறையினர் எடுத்துக்கொள்ளலாம். இந்திய அரசின் வருமான வரிச் சட்டத்தின்படி வேளாண்மைத் தொழிலுக்கு வரி கிடையாது. தமிழகம் போன்ற மாநிலங்களில் மின் கட்டணமும் கிடையாது. இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தொழில் செய்துவருபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருவது மிகவும் கவலைக்குரிய ஒன்று.

மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் விவசாயிகளின் உண்மை நிலையைக் கண்டறிந்து, வேளாண் தொழிலையும், விவசாயிகளையும் ஊக்குவித்தல் மிகவும் அவசியம்.

- எம்.ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in