

மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, கண்டிக்கத்தக்க வகையில் பேசியிருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. மதச்சார்பற்ற நாட்டில் மதவெறியைத் தூண்டும் கருத்துக்களை ஒரு அமைச்சரே பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுப் பதவிப் பிரமாணம் பெற்றவர், அனைத்து மதத்தினரது உரிமைகளையும் மதித்து நடக்க வேண்டும். அப்படி இல்லாமல் போகும்பட்சத்தில் நாட்டின் ஒற்றுமை கேள்விக்குள்ளாக்கப்படும்.
- மகேஷ், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…