

புதிதாகக் கட்டப்பட்ட சிவகங்கை தாலுகா அலுவலகம், மதுரை நவீன ஹாக்கி மைதானம் போன்றவை முதல்வரால் திறந்துவைக்கப்படாததன் காரணம் ஆச்சரியம் அளிக்கிறது.
திறப்புவிழா கல்வெட்டுகளில் தனது பெயர் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காகத்தான் தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த விழாக்களில் கலந்துகொள்ளத் தயங்குகிறார் என்றால் இது எந்த வகை ஜனநாயகம்? கட்சித் தலைமைக்குக் கட்டுப்படுவது என்பதற்கு எல்லையே இல்லையா?
இதனால், மாநிலத்தின் நலத்திட்டங்கள் தாமதமாவது அரசுக்கு நற்பெயரை உருவாக்கித் தராது.
- கமலேஷ்,மின்னஞ்சல் வழியாக…