

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘இந்து டாக்கீஸ்’ பகுதியில் வெளியான கண்ணீரை மறைத்த சிரிப்பு மேதை’ கட்டுரை அருமை. அப்போதையத் தமிழ்த் திரைப்படங்களில் தன்னுடைய நகைச்சுவையின் மூலம் பகுத்தறிவு கருத்துக்களைப் புகுத்தியவர் கலைவாணர். அவருடைய நகைச்சுவை யாருடைய மனதையும் புண்படுத்தாது. கலைவாணர் போன்ற நடிகர்களின் நகைச்சுவை ரசிகர் மனதில் என்றும் நிலைத்து இருக்கும். காரணம், மக்கள் மனதில் சமுதாயப் பிரச்சினைகள் பதியும்வண்ணம் நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவது அவரது தனிச்சிறப்பு.
- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.