காகித பொக்கிஷம்

காகித பொக்கிஷம்
Updated on
1 min read

அருணகிரியின் ‘அப்பா விட்டுப்போன பொக்கிஷம்’ அடி மனதில் புதைந்திருந்த நினைவுகளைக் கிளறுவதாக இருந்தது. கம்பியில் குத்தி வைக்கப்பட்டிருந்த காகிதப் பொக்கிஷங்களை நான் சில வீடுகளில் பார்த்திருக்கிறேன். பாட்டிமார்கள் விழிகளில் நீர் தேங்க ‘இது எல்லாம் என் பேரன் எனக்காக எழுதியது’ என்று சொல்லி, அந்தக் காகித பொக்கிஷத்தைப் பேரனாகவே கருதி நெஞ்சோடு அணைத்ததைப் பார்த்து அப்படியே கரைந்துபோயிருக்கிறேன். .

- ஜே. லூர்து,மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in