

இவ்வார கிராமஃபோன் பகுதியில் எழுத்தாளர் சுபாவின் கைவண்ணத்தில் அந்தக் காலக் கொலு பற்றியும், செட்டியார் பொம்மையும் செந்தேளும் பற்றியும், ஜமீன்தாரின் துக்கத்தை மாற்றி வைக்கப்பட்ட கொலு பற்றியும் அவர்களுக்கே உரிய லாவகத்துடன் கூறியிருந்த விதம் ரசிக்க வைத்தது.
பழங்கால வழக்கத்தின்படி இப்போதும் பல வீடுகளில் பாரம்பரியத்தை மறக்காமல் கொலு வைத்திருப்பதைப் பார்க்கும்போது ரசனையையும் மீறிய ஒரு மகிழ்ச்சி வருகிறது.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.