களச் செயல்பாட்டிதழ்

களச் செயல்பாட்டிதழ்
Updated on
1 min read

இரட்டைமலை சீனிவாசன் ‘பறையன்’ இதழைத் தனது களச் செயல்பாட்டுக்கான ஒரு பகுதியாகவே பயன்படுத்தினார்.

இரண்டணா விலையுள்ள நான்கு பக்கங்களைக் கொண்ட மாத இதழாகவே முதலில் வெளியானது. அவ்விதழைத் தொடங்க மலையாள நண்பர் ஒருவர்தான் அவருக்கு உதவினாராம்.

வெகு விரைவிலேயே அது வார இதழாக மாறியது. ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இரவுப் பொழுதில் ரகசியமாகவே சந்தித்துவந்தார் சீனிவாசன். 1

895-ல்தான் முதல்முறையாகத் தாழ்த்தப்பட்ட சகோதரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையான பொதுக்கூட்டத்தை விக்டோரியா மன்றத்தில் நடத்தினார். அப்போதைய திண்ணைப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் இரட்டைமலை சீனிவாசன்.

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in