

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி முதலான சமூகக் காரணிகளில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பதை, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டமிடலின் வெற்றி என்றே கருதலாம்.
‘அவதார்’ குழுமம் என்னும் ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்-2025’ அறிக்கையின்படி பெண்களுக்கான பாதுகாப்பு, சாதகமான சூழலில் பெங்களூரு முதலிடத்தையும், சென்னை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
125 நகரங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் சமூகப் பாதுகாப்பு, பொதுச் சேவை, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி முதலான ‘சமூகரீதியாக உள்ளடக்கும்’ காரணிகளில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சிக்கான சூழலில் சென்னையைக் காட்டிலும் சற்று வலுவான நிலையில் பெங்களூரு உள்ளது. புணே, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. முதல் 25 நகரங்களின் பட்டியலில் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு ஆகிய தமிழ்நாட்டின் ஏழு நகரங்கள் இடம்பெற்றுள்ளன.