

தவெக தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை, அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களின் நம்பிக்கையைத் தக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
அதே வேளையில், எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள், மரபாகப் பின்பற்றப்பட்டு வந்த அம்சங்கள் விடுபட்டிருப்பது விமர்சனங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது.
தமிழக நிதி அமைச்சர் என்.மரிய வில்சன் சட்டசபையில் ஆகஸ்ட் 5இல் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பல புதிய திட்டங்களும் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 55,775 கோடி எனவும் மொத்தக் கடன் ரூ.10.98 லட்சம் கோடி எனவும் தற்போதைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமுகமான நிதிநிலையை அடைய அரசுக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என அமைச்சர் கூறியிருக்கிறார்.