

டெல்லி ஒன்றிய ஆட்சிப் பகுதி அரசு அண்மையில் வெளியிட்ட வரைவு மின்னூர்திக் கொள்கை 2.0, காற்று மாசுப் பிரச்சினையால் அவதிப்பட்டுவரும் தலைநகருக்குக் கைகொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பை விதைத்துள்ளது.
காற்று மாசுக் குறைப்பு, தூய்மைப் போக்குவரத்து ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2026 – 2030க்கான மின்னூர்திக் கொள்கையை வெளியிட்டுள்ளது டெல்லி அரசு. மின்னூர்திப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், 30 லட்சம் ரூபாய் வரையிலான மின்சார வாகனங்களை வாங்கினால் சாலை வரி, பதிவுக் கட்டணம் ஆகியவற்றில் 100% விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், புதிதாக மின்னூர்திகள் வாங்கும்போது பழைய வாகனங்களை அகற்றுவதற்கான ஊக்கத்தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.