Published : 25 Jan 2023 06:45 AM
Last Updated : 25 Jan 2023 06:45 AM

ப்ரீமியம்
கூர்நோக்கு இல்லங்கள்: கொடுமைகள் முடிவுக்கு வரட்டும்!

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒரு சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையைக் குலைத்திருக்கிறது. சிறார் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே குற்றத்தில் ஈடுபட்டதும், உண்மையை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே ஒரு கடையில் பணிபுரிந்துவந்த கோகுல்ஸ்ரீ (17), டிசம்பர் 29ஆம் தேதி இரவு தனது நண்பரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது, ரயில்வே பாதுகாப்புப் படையினரால், சந்தேகத்தின்பேரில் பிடித்துவைக்கப்பட்டான். அவன் திருட்டு ஒன்றில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மறுநாள் செங்கல்பட்டு மாவட்டச் சிறார் நீதி வாரியத்தில் விசாரிக்கப்பட்ட அந்தச் சிறுவன், அங்குள்ள கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x