Published : 17 Jan 2023 06:45 AM
Last Updated : 17 Jan 2023 06:45 AM

ப்ரீமியம்
தழைக்கட்டும் தமிழர் பெருமிதம்!

தமிழ்ப் பண்பாட்டு விழாக்கள் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கப்படுவது 2023ஆம் ஆண்டுக்கு இனிமையான தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருபக்கம் புத்தகத் திருவிழா, மறுபக்கம் பொங்கல் விழா என இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகள் தை மாதத்தில் நிகழ்வது வழக்கம்தான். இந்த முறை அதில் கூடுதல் உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு அரசின் பங்களிப்பும் அதற்கு முக்கியக் காரணம்.

கடந்த சில பத்தாண்டுகளாகவே, தமிழ்ப் பண்பாடு குறித்த ஆர்வம் தமிழர்களிடையே குறைந்துவருவதாகச் சான்றோர் மத்தியில் ஆதங்கக் குரல்கள் ஒலித்துவந்தன. இப்போது அந்த நிலை மாறத் தொடங்கியிருக்கிறது. 2017இல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த மாபெரும் போராட்டம், தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகள் மீதான புத்தெழுச்சியைத் தமிழ்நாட்டு மக்களிடம் விதைத்தது. கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட பொருட்கள், பெருமிதம் தாண்டிய வரலாற்று ஆர்வத்தைத் தமிழர்களிடம் தூண்டிவிட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x