Published : 04 Jan 2023 06:45 AM
Last Updated : 04 Jan 2023 06:45 AM

ப்ரீமியம்
தொலைதூர வாக்குப்பதிவு இயந்திரம்: தெளிவு அவசியம்!

உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர், தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்கும் வகையில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தத் தயார் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. புலம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்ப்பதும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதும் இதன் முதன்மையான நோக்கங்கள். எனினும், இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்த சில கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநிலத்துக்குள்ளும், பிற மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 45.36 கோடி. அந்த எண்ணிக்கை இப்போது கணிசமாக அதிகரித்திருக்கும். இவர்கள் தங்கள் சொந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்கள் போன்றவற்றில் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கும். விடுப்பு, பயண ஏற்பாடுகள் போன்றவை சரியாக அமையவில்லை எனில், வாக்களிப்பதையே தவிர்க்க வேண்டிவரும். இதனால், வாக்கு சதவீதம் குறைவதாகப் பேசப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x