Published : 22 Dec 2022 06:45 AM
Last Updated : 22 Dec 2022 06:45 AM

ப்ரீமியம்
வெற்றி தோல்விகளைத் தாண்டிய விளையாட்டு!

2022 இன் மிகச் சில கொண்டாட்டத் தருணங்களில் ஒன்றாக, கத்தாரில் நடந்து முடிந்திருக்கிறது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி. தென் அமெரிக்க தேசமான அர்ஜென்டினா, ஐரோப்பிய நாடான பிரான்ஸை வென்று மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. 92 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை எனும் அளவுக்குப் பரபரப்பான தருணங்களைக் கொண்டிருந்த இறுதிப்போட்டி, இன்னும் பல சேதிகளை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

முதல் போட்டியிலேயே, சவுதி அரேபிய அணியிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்த அர்ஜென்டினா, உடனடியாக மீண்டெழுந்து அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. “இது வலிதரும் தோல்விதான். ஆனால், நம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாடுவோம்,” என்று சொன்ன அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி, தன் மந்திரச் சொற்களை மெய்ப்பித்துக் காட்டிவிட்டார். 1986இல் மரடோனாவின் தலைமையில் உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா, இப்போது மெஸ்ஸியின் சீரிய வழிகாட்டுதலில் மீண்டும் வெற்றியைச் சுவைத்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x