Published : 09 Dec 2022 06:45 AM
Last Updated : 09 Dec 2022 06:45 AM

ப்ரீமியம்
போக்சோ சட்டம்: பொறுப்புணர்வு அவசியம்

எந்தவொரு குற்றவியல் சட்டமும், குற்றவாளிகளைத் தப்பவிடாமல் தண்டனைக்கு உள்ளாக்கும் நோக்கில்தான் உருவாக்கப்படுகிறது. அதே சட்டம், அதன் நோக்கத்தைத் தாண்டி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்தால், உறுதியான எல்லைக்கோட்டை வகுத்துக்கொள்வது அவசியம். காதல் உறவு தொடர்பான போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டுக் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனும் ஆக்கபூர்வமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.

18 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் பாலின வித்தியாசமின்றிப் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து காப்பதற்காக, போக்சோ சட்டம் 2012இல் கொண்டுவரப்பட்டது. குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் மரண தண்டனைவரை வழங்க வகை செய்யும் இந்தச் சட்டம், இன்றைய சூழலில் அத்தியாவசியமானது. இச்சட்டத்தின்மீது நம்பிக்கை கொண்டிருப்பதால்தான், பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையை நாடுவது தமிழகத்தில் அதிகமாகியிருக்கிறது. அவர்களது நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், விரைவில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x