Published : 06 Dec 2022 06:45 AM
Last Updated : 06 Dec 2022 06:45 AM

ப்ரீமியம்
மாற்றத்துக்கான நம்பிக்கை!

முன்னுதாரண நடவடிக்கைகள் மிகப் பெரிய அளவில்தான் திட்டமிடப்பட வேண்டும் என்றில்லை; தொலை நோக்குடனும் மனிதாபிமானத்துடனும் எடுக்கப்படும் நடவடிக்கைகள், சிறிய அளவிலானவையாக இருந்தாலும் பெரும் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சும் வகையில் அமைந்துவிடும். தனது 100 வார்டுகளிலும், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரத்தைப் பயன்படுத்த மதுரை மாநகராட்சி எடுத்திருக்கும் முடிவு அப்படியானதுதான்.

கழிவுநீர்த் தொட்டிகளில் விஷவாயு தாக்கித் தொழிலாளர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணைய (NCSK) புள்ளிவிவரத்தின்படி, 1993 முதல் 2022 பிப்ரவரி வரை இந்தியாவில் 989 பேர் கழிவுநீர்த் தொட்டி, நிலத்தடி சாக்கடை போன்றவற்றைச் சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்திருக்கிறார்கள். துப்புரவுப் பணியாளர்களின் நிலை குறித்து ஆய்வுசெய்து, மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும் இந்த ஆணையம், தமிழகத்தில் மட்டும் 218 பேர் இப்படியான கொடூரத்துக்குப் பலியாகியிருப்பதாகப் பதிவுசெய்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x