Published : 17 Nov 2022 06:45 AM
Last Updated : 17 Nov 2022 06:45 AM
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிகுமார் - உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, மருத்துவர்களின் அலட்சியத்தால் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. 17 வயதான பிரியா, சென்னை ராணி மேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பிரிவில் முதலாமாண்டு படித்துவந்தார். கால்பந்தாட்ட வீராங்கனையான அவர், வலது காலில் வலி ஏற்பட்டதால் கொளத்தூர் பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். நவம்பர் 7 அன்று அவருக்குக் கால் மூட்டுச் சவ்வை சீராக்கும் அறுவைசிகிச்சை நடைபெற்றது.
சிகிச்சைக்குப் பிறகு பிரியாவுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் சேதமடைந்ததால், அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கே அவருக்கு வலது கால் நீக்கப்பட்ட நிலையில், சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்யப்பட்டுவந்த நிலையில், இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மரணம் நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT