Published : 11 Nov 2022 06:45 AM
Last Updated : 11 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
பொறியியலில் தமிழ்ப் பாடம்: பாராட்டுக்குரிய முன்னெடுப்பு!

தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடங்கள் நிகழாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது பாராட்டுக்குரிய அறிவிப்பு. ஏற்கெனவே தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் இளங்கலைப் படிப்புகளிலும் இரண்டாம் ஆண்டிலும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக அமைச்சரின் இந்த அறிவிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

இளங்கலை படிப்புகளுக்குத் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டபோதே, அதிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது பொறியியல் மாணவர்களுக்கும் தமிழ்ப் பாடம் என்கிற அமைச்சரின் அறிவிப்பு மூலம் அந்தக் குறையைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு 20% உள் இடஒதுக்கீட்டு முறை தற்போது பின்பற்றப்பட்டுவருகிறது. சாதாரண அரசுப் பணிகளுக்குக்கூடப் பொறியியல் படித்த மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிப்பதைக் காண முடிகிறது. இந்தச் சூழலில், அமைச்சரின் அறிவிப்பு பொறியியல் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x