Published : 09 Nov 2022 06:45 AM
Last Updated : 09 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது!

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 103ஆம் சட்டத் திருத்தம் செல்லும் என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு நவம்பர் 7 அன்று தீர்ப்பளித்தது. பொருளாதார நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் இடஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை என தலைமை நீதிபதி யு.யு.லலித்தையும் உள்ளடக்கிய இந்த அமர்வு கூறியுள்ளது.

மத்திய அரசு 2019இல் கொண்டுவந்த 103ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் தீர்ப்பளிக்க, சட்டத் திருத்தம் செல்லாது எனத் தலைமை நீதிபதி லலித்தும் நீதிபதி ரவீந்திர பட்டும் தீர்ப்பளித்தனர். இதனால் 3:2 என்னும் பெரும்பான்மை அடிப்படையில் 103ஆம் சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. செல்லாது எனத் தீர்ப்பளித்த நீதிபதிகளும்கூடப் பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் ஏற்கெனவே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள் என்பதற்காகப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டு வரம்பில் சேர்க்காதது அரசமைப்புச் சட்டம் அனுமதிக்காத பாகுபாடு என்றுதான் கூறியிருக்கிறார்கள். பொருளாதார நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்குவதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x