Published : 08 Nov 2022 06:45 AM
Last Updated : 08 Nov 2022 06:45 AM
ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரம், ஒடிசா, தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகி ஆளும் பாஜக-வுக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இம்மாநிலங்களில் நடந்த 7 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 இடங்களை பாஜக கைப்பற்றித் தங்களது கை ஓங்கியிருப்பதை நிரூபித்துள்ளது. பிஹாரில் ஒரு இடத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், மகாராஷ்டிரத்தில் அந்தேரி கிழக்குத் தொகுதியை சிவசேனா (உத்தவ்) பிரிவும், தெலங்கானாவில் நடந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் என மூன்று கட்சிகளும் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. இதில் தெலங்கானா முனுகோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பல்வாய் ஸ்ராவந்தி 2014ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர். அவர் அப்போது பெற்ற வாக்குகளைக்கூட காங்கிரஸ் சார்பில் தற்போது பெற முடியவில்லை என்பது பரிதாபத்தின் உச்சம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT