Published : 02 Nov 2022 06:45 AM
Last Updated : 02 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
வடகிழக்குப் பருவமழை: மக்கள் பாதுகாப்பு முதன்மை பெறட்டும்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இது தமிழகம் முழுவதும் சீரான மழைப்பொழிவைக் கொண்டுவந்தாலும், டெல்டா, வட தமிழகப் பகுதிகளே மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக இருக்கின்றன. தலைநகர் சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் பாதிப்புகள், 2015 பெருமழை வெள்ளக் காலத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தன. பருவமழைக் காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், மக்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசின் தலையாய பணி. அந்த வகையில் கடந்த ஆண்டு மழை, வெள்ளப் பாதிப்புகளிலிருந்து அரசு நிர்வாகம் பாடம் படித்திருப்பதை உணர முடிகிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின்படி, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நகரம் முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் பணிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணனின் மரணத்துக்குப் பிறகு சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெறாத அனைத்து இடங்களிலும் தடுப்புகளும் எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அது மட்டுமே போதாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x