Published : 27 Oct 2022 06:45 AM
Last Updated : 27 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
மழைநீர் வடிகால் மரணம்: காரணம் தேடுவதற்கு இதுவா நேரம்?

தலைநகர் சென்னையில் நிறைவுபெறாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து 25 வயதுடைய ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துரிதகதியில் நடைபெற்றுவரும் நிலையில், அலட்சியப் போக்கால் இந்த மரணம் நடந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

“முத்துகிருஷ்ணன் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பகுதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்; “எந்த இடத்தில் உயிரிழந்தார் என அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியாத நிலை இருக்கிறது” என்று தமிழகப் பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். மாநகராட்சியோ நெடுஞ்சாலைத் துறையோ எதுவாக இருந்தாலும், இரண்டுமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகின்றன. எனவே, அமைச்சர் குறிப்பிட்டதுபோல இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததில் அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. மழைநீர் வடிகால் பணியையொட்டி சென்னையில் நடைபெறும் முதல் மரணம் அல்ல இது. கடந்த மே மாதத்தில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஜூன் மாதத்தில் கே.கே.நகரில் வங்கிப் பெண் அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x