Published : 18 Oct 2022 06:45 AM
Last Updated : 18 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
நெல் கொள்முதல்: தேவை கொள்கையில் மாற்றம்!

இந்த ஆண்டு குறுவை சாகுபடி முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 1 இல் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பெய்துவரும் மழையால், காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அது நெல்லின் ஈரப்பதத்தைப் பாதித்திருக்கிறது. மத்திய நெல் கொள்முதல் கொள்கையின்படி 17% ஈரப்பதமே கொள்முதலுக்கு ஏற்றது; தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில் அதை 19% ஆக உயர்த்தியது மத்திய அரசு.

ஆனால், விற்பனைக்கு உள்ள நெல்லின் ஈரப்பதம் 19%-க்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ஈரப்பதம் காரணமாகக் காரீஃப் பருவ நெல் கொள்முதலை மத்திய அரசு நிறுத்தியது; தெலங்கானாவிலும் மத்திய அரசின் நெல் கொள்முதல் கொள்கை தொடர்பாக மாநில – மத்திய அரசுகளுக்கு இடையே கருத்துகள் முரண்பட்டன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை மாநில அரசின் முகமை அமைப்புகள் வழியாகவே மத்திய அரசு கொள்முதல் செய்துவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசின் கொள்முதல் விலையுடன் சேர்த்து நெல் ரகத்தைப் பொறுத்து மாநில அரசு ரூ.100, ரூ.75 ஊக்கத்தொகை வழங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x