Published : 07 Oct 2022 06:45 AM
Last Updated : 07 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
ஆம்னி பேருந்துக் கட்டணம்: இனியும் அரசு தாமதிக்கக் கூடாது!

வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் தனியாரால் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக எழுந்த புகார்களுக்குப் பிறகு தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (டிஎன்பிஓஏ) அண்மையில் வெளியிட்ட கட்டண உயர்வுப் பட்டியல் பல தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. விமானப் பயணக் கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

உதாரணமாக, சென்னை - மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.1,930 - ரூ.3,070 வரையிலும் சென்னை - கோவைக்கான கட்டணம் ரூ.2,050 - ரூ.3,310 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டண உயர்வு ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழக அரசின் மீதான அதிருப்திக்கும் வழிவகுத்திருக்கிறது. கரோனா கால இழப்புகள், எரிபொருள் விலை உயர்வு, சுங்கச் சாவடிக் கட்டண உயர்வு போன்றவற்றைக் கட்டண உயர்வுக்குக் காரணமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்வைக்கிறார்கள். அதே நேரம், இவற்றால் மக்களும் ஏற்கெனவே தொடர் பாதிப்புகளைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் இயற்கைப் பேரிடர்கள், அரசின் கொள்கை முடிவு ஆகியவற்றால் நிகழும் பாதிப்புகளை மக்களின் தலையில் சுமத்துவது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x