Published : 04 Oct 2022 06:45 AM
Last Updated : 04 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
மத அடிப்படைவாதம் தடைசெய்யப்பட வேண்டியதே!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை அதன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு தடைசெய்துள்ளது. 2006இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கேரளத்தின் தேசிய வளர்ச்சி முன்னணியின் தொடர்ச்சியாக உருவானது. கர்நாடகத்தின் ஃபோரம் ஆஃப் டிக்னிட்டி, தமிழகத்தின் மனித நீதிப் பாசறை ஆகிய அமைப்புகளும் 2009இல் இதில் இணைக்கப்பட்டன. தொடர்ந்து மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகளும் இதில் இணைந்தன.

சிறுபான்மையினர் அதிகளவில் உள்ள கேரளத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. அந்தக் காலகட்டத்திலேயே அப்போதைய முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அதன் தீவிர மதப் பிரச்சாரத்தை விமர்சித்தார். ஆனால், இந்நிலை சில ஆண்டுகளில் மாறியது. பிஎஃப்ஐயின் அரசியல் கட்சியான ‘சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா’வின் ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக நாடவேண்டி வந்தது. கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பொதுத்தேர்தல்களில் எஸ்டிபிஐ தொடர்ந்து போட்டியிட்டுவருகிறது. 2020 கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் 95 இடங்களைக் கைப்பற்றி, வலுவான வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x