Published : 03 Oct 2022 06:45 AM
Last Updated : 03 Oct 2022 06:45 AM

ப்ரீமியம்
இணையவழிச் சூதாட்டத் தடை... முயற்சி சட்டமாகட்டும்!

இணையவழிச் சூதாட்டத்தைத் தடைசெய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இணையவழிச் சூதாட்டத்தின் காரணமாகச் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; பலர் வாழ்நாள் முழுமைக்கும் மீளமுடியாக் கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில், இணையவழிச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மிகக் கடமை தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டது.

கண்காணிப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட பரந்துவிரிந்த இணையவெளியில், இந்தச் சூதாட்டங்கள் நடத்தப்படுவதாலும் அவை மனித உயிர்களைப் பறிக்கும் ஆபத்தைக் கொண்டிருப்பதாலும் இணையவழிச் சூதாட்டத்துக்குத் தடைவிதிப்பதே சரியான தீர்வு என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதன்படி 2021 பிப்ரவரியில் அப்போதைய அதிமுக அரசு இணையவழிச் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டுகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. ஆனால், திறன் சார்ந்த விளையாட்டுகளைத் தடைசெய்வது அரசமைப்புக்கு விரோதமானது என்று கூறி, தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. இதற்குப் பிறகும் தமிழ்நாட்டில் இணையவழிச் சூதாட்டத்தால் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x