Published : 29 Sep 2022 06:45 AM
Last Updated : 29 Sep 2022 06:45 AM

ப்ரீமியம்
மக்களைக் காப்பதே அரசுகளின் முதன்மைக் கடமை

இஸ்லாமியக் குடியரசு நாடான ஈரானில் பொது இடங்களில் பெண்கள் அணிந்துகொள்ள வேண்டிய ஹிஜாபை (தலைமறைப்புத் துணி) ‘தவறான’ முறையில் அணிந்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட ஈரானிய-குர்து இனத்தைச் சேர்ந்த மஹ்சா அமினி (22), மர்மமான முறையில் உயிரிழந்தது, அந்நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது. அமினி, மாரடைப்பினால் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினாலும் அவர் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக அமினியின் பெற்றோரும் செயற்பாட்டாளர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

ஈரானில் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளின் காரணமாகப் பெண்களின் உரிமைகள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அமினியின் மரணம் இப்போது இந்தப் பிரச்சினையை விஸ்வரூபமாக்கியுள்ளது. தலைநகரம் தெஹ்ரான், ஷியா முஸ்லிம்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த மாஷத் ஆகிய நகரங்களில் சாலைகளில் குழுமிய மக்கள் இஸ்லாமிய மதகுருவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரான் ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பெண்கள் சிலர் ஹிஜாபைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தியாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்குக் கர்நாடக மாநில அரசு தடைவிதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் சிலர் வழக்காடிவருகின்றனர். இந்த நேரத்தில் ஹிஜாபைக் கட்டாயமாக அணிய வேண்டிய அரசு நிர்ப்பந்தத்துக்கு எதிராக ஈரானியப் பெண்கள் போராடத் தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. பத்து நாட்களுக்கு மேலாகத் தொடரும் இந்தப் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உட்பட இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x