Published : 20 Sep 2022 06:40 AM
Last Updated : 20 Sep 2022 06:40 AM
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறார் மீதான பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கான ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பதியப்படும் பாலியல் குற்ற வழக்குகளைக் கண்காணிப்பதற்கான சிறப்புக் குழுக்களைத் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உருவாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. வழக்கு பதியப்படுவது, நீதிமன்ற விசாரணை, வழக்கு குறித்த தகவல்களைப் பாதிக்கப்பட்ட சிறார் - அவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்தல், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய அனைத்தையும் இந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்.
தென்மண்டல ஐஜியாகப் பொறுப்பேற்ற பிறகு, குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குகளைப் பதிவு செய்வதைத் தாண்டி, குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபித்து உரிய நேரத்தில் தண்டனை பெற்றுத் தருவதையும் பாதிக்கப்பட்ட சிறாருக்கு மறுவாழ்வை உறுதி செய்வதையும் உள்ளடக்கிய முழுமையான பார்வையுடன் போக்சோ வழக்குகளைக் கையாளும் அணுகுமுறை மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறார் அஸ்ரா கார்க். இதற்காகவே அதிகாரிகள் சிலர் குழுவாக இணைந்து போக்சோ சட்டத்தையும் அதன் விதிகளையும் விரிவாகப் படித்துத் தெளிவடைந்திருக்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT