Published : 19 Sep 2022 06:55 AM
Last Updated : 19 Sep 2022 06:55 AM

ப்ரீமியம்
தலைமை வழக்கறிஞர்களுக்கும் வயது வரம்பு தேவை!

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரான முகுல் ரோஹத்கி, மீண்டும் ஒருமுறை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, அவர் ஜூன் 2014 முதல் ஜூன் 2017 வரையில் அந்தப் பொறுப்பை வகித்துள்ளார். தற்போது அட்டர்னி ஜெனரலாக உள்ள மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், கடந்த ஜூன் மாதத்துடன் விலகிக்கொள்ள முடிவெடுத்தார். மூன்று மாத காலம் அப்பதவியில் தொடருமாறு மத்திய அரசு அவரைக் கேட்டுக்கொண்டது. அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்படி, செப்டம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. அவரது இடத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிக உயர்ந்த சட்ட அலுவலர் பொறுப்பான அட்டர்னி ஜெனரல் பணிக்கு ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்தவரை மறுமுறையும் நியமிக்கும் வழக்கம் சரியானதா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகிக்கும் கே.கே.வேணுகோபால், 90 வயதைக் கடந்தவர் என்பது, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் நீண்ட காலமாகச் செலுத்திவரும் அபரிமிதமான செல்வாக்கின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x