Published : 10 Jun 2022 04:59 PM
Last Updated : 10 Jun 2022 04:59 PM
கடலூர் மாவட்டம் அருங்குணம் குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றில் மூழ்கிச் சிறுமிகள் உட்பட ஏழு பெண்கள் உயிரிழந்திருப்பது பரிதாபத்துக்குரியது. தடுப்பணைக்காக மணல் எடுக்கப்பட்ட பள்ளத்தில் சிக்கி அவர்கள் இறந்துள்ளனர். தடுப்பணைக் கட்டுமானம், ஆற்றில் மணல் எடுத்தல் ஆகியவற்றில் காட்டப்பட்டுவரும் அலட்சியம் எத்தனை உயிர்களைப் பறிக்கக் காரணமாக இருக்கிறது என்பதற்கு மேலும் ஓர் உதாரணமாகியிருக்கிறது இந்தத் துயரச் சம்பவம்.
நீர்நிலைகளில் நேரும் இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பாதுகாப்பற்ற நீர்நிலைகளில், அதைக் குறித்த எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்பட வேண்டும். அதுபோல, பள்ளிக் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி வகுப்புகளின் ஒரு பகுதியாக, நீச்சல் பயிற்சி வழங்குவது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT