Published : 24 May 2022 07:06 AM
Last Updated : 24 May 2022 07:06 AM

ப்ரீமியம்
வகுப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்!

கேரளத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜு அண்மையில் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பெருங்கவனத்தை ஈர்த்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தின்போது இயக்கப்படாதிருந்த கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள், மீண்டும் சாலைகளில் இயக்க முடியாத நிலையில் உள்ளன. இந்தப் பேருந்துகளை உலோகத் துண்டுகளாக மாற்றலாம் என்று முன்பு முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கு மாறாக, இயக்க முடியாத நிலையிலிருக்கும் அந்தப் பேருந்துகளைப் பள்ளிக்கூட வகுப்பறைகளாக மாற்றலாம் என்ற புதிய முடிவை அறிவித்துள்ளார் அந்தோணி ராஜு. பழைய பேருந்துகளை வெறும் உலோகத் துண்டுகளாக விற்பதைக் காட்டிலும், அவற்றை இம்மாதிரி திறம்பட வெவ்வேறு வகைகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x