Published : 11 May 2022 06:35 AM
Last Updated : 11 May 2022 06:35 AM

ப்ரீமியம்
பேரறிவாளன் வழக்கு: அதிகாரப் பிரிவினையும் நீதித் துறை இடையீடும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் தண்டனைக் குறைப்புக்கான கருணை மனுவையொட்டி நடந்துவந்த மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்த விவாதம் தற்போது நிர்வாகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இடையிலான விவாதமாக மாறியிருக்கிறது. பேரறிவாளனின் கருணை மனுமீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும்வரை காத்திருக்குமாறு மத்திய அரசின் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வழக்கில் மத்திய அரசு வாதாடத் தயாராக இல்லாதபட்சத்தில், தாமே பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கப்போவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஒரு முடிவெடுக்கப்பட்டால், அது நிர்வாகத் துறையின் தலைமை என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அரசமைப்பின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள நீதித் துறை அதிகாரத்தை விஞ்சி, உச்ச நீதிமன்றமே அதில் தலையிடும் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கக்கூடும். அவ்வாறு உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கவும் அரசமைப்பு அனுமதிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x