Published : 10 May 2022 07:32 AM
Last Updated : 10 May 2022 07:32 AM

ப்ரீமியம்
இரவு விசாரணைகள் இனி கிடையாது: முற்போக்கான ஓர் உத்தரவு!

ஏப்ரல் 19-ல் சென்னையில் காவல் நிலைய விசாரணையின்போது இளைஞர் விக்னேஷ் இறந்தது தொடர்பாக, எதிர்க்கட்சியான அதிமுகவும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், நம்பிக்கைக்குரிய சில நகர்வுகள் தென்படத் தொடங்கியுள்ளன. விக்னேஷின் இறப்பு சந்தேகத்துக்குரியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில், தற்போது அது கொலைவழக்காக மாற்றப்பட்டு, சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 காவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கைகள், காவல் துறையைத் தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் விருப்புவெறுப்பின்றிச் செயல்படுகிறார் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இதுபோலவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கமணி உடல்நலம் குன்றி இறந்ததும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x