Published : 21 Apr 2022 06:30 AM
Last Updated : 21 Apr 2022 06:30 AM
எதிர்க்கருத்து உரிமையும் சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடர், மாநில அரசுக்கும் ஆளுநர் அலுவலகத்துக்கும் இடையிலான அதிகாரச் சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி, கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டின் விவாதப் பொருளாக இசையமைப்பாளர் இளையராஜா மாறியிருக்கிறார்.
பி.ஆர்.அம்பேத்கரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஆங்கிலப் புத்தகம் ஒன்றுக்கு அவர் எழுதிய முன்னுரையில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதிய பாராட்டுரைகளே இந்த விவாதங்களுக்குக் காரணம். பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், அவரது ஆதரவாளர்களால் பாராட்டப்படுவதும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுவதும் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகவே கருதப்பட்டுவருகிறது. மோடியைக் குறித்த பாராட்டுகள், விமர்சனங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும். ஆனால், தற்போது அரசியல் வட்டத்துக்கு வெளியிலிருந்து அவரைக் குறித்து வந்திருக்கும் ஒரு பாராட்டை எதிர்க்கட்சிகளும் எதிர்க் கருத்தாளர்களும் விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்த விருப்பமின்மையும்கூட இயல்பானதுதான். ஆனால், அதை வெளிப்படுத்துகின்ற விதத்தில் கண்ணியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT