Published : 19 Apr 2022 05:58 AM
Last Updated : 19 Apr 2022 05:58 AM
கடந்த வாரம் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகனின் அமைச்சரவையில் நடந்துள்ள மாற்றங்கள், மற்ற மாநிலங்களை வியப்புடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களில் 13 பேர் புதியவர்கள். பழைய அமைச்சர்களில் 11 பேர் மட்டுமே தற்போது தொடர்கிறார்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்களுக்குத் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
துணை முதல்வராகப் பொறுப்பு வகித்த ஐந்து பேரில், இருவர் மட்டுமே அப்பொறுப்பில் தொடர்கிறார்கள். மூன்று பேர் புதிய துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். 2019 சட்டமன்றத் தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பேற்றபோதே இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படும், 90% இடங்கள் புதியவர்களுக்கு அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார். பழைய அமைச்சர்களில் 11 பேர் தற்போது தொடர்ந்தாலும் ஜெகன்மோகன் தான் உறுதியளித்தபடி, பெரும் பகுதி மாற்றத்தைச் செய்து முடித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT