

தமிழக அரசு கொள்முதலில் செய்த தாமதத்தால் பல இடங்களில் மழைநீரில் நெல் வீணாகிக்கொண்டிருப்பதாக முறையீடுகள் ஓங்கி ஒலிக்கின்றன. விவசாயிகளைத் துவண்டுபோக வைக்கிற இந்தச் சூழல், விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.
பருவமழை தொடங்கிவிட்ட சூழலில், நெல் கொள்முதல் நிலைய வளாகங்களில் காத்திருப்பில் உள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனையும் காட்சிகள் வேதனையில் ஆழ்த்துகின்றன. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் போன்ற இடங்களில் பல நாள் காத்திருப்பால் லாரிகளில் உள்ள நெல் முளைவிடும் அளவுக்கு நிலைமை உள்ளது.