தலையங்கம்
தீபாவளித் திருநாளின் தித்திப்பு நிலைத்திருக்கட்டும்!
தேசம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில் உற்சாகத்துடன் சில உறுதிமொழிகளையும் ஏற்போம். எந்த ஒரு திருநாளையும் தனிநபருக்கான மனநிலையோடு அணுகாமல், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக அணுகினால், அதில் கிடைக்கும் இன்பம் அளவில்லாதது. ஒளிமயமான தீபாவளியும் அதற்கு விதிவிலக்கல்ல.
சமயம், குடும்பம், தொழில், வேலை போன்றவற்றின் அடிப்படையில் ஏதேனும் ஒரு கொண்டாட்டம் ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஒருவர் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கும் தனது குடும்பத்தினர், நண்பர்களோடு உறவாடுவதற்கும் பண்டிகைகள் வாய்ப்பு அளிக்கின்றன.
