

சென்னையில் பலர் வீடின்றி நடைபாதைகளில் வசிக்கும் அவலம் தொடர்வதை ஒரு தன்னார்வ அமைப்பின் புதிய தரவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. வெயில், மழை, கடுங்குளிர், நோய்த் தொற்று உள்ளிட்ட சூழல்களை ஒரு பெருங்கூட்டம் நிராயுதபாணிகளாகவே எதிர்கொள்ளும் நிலை ஆரோக்கியமானதல்ல.
ஐஆர்சிடியுசி (Information and Resource Centre for the Deprived Urban Communities) என்கிற அமைப்பு, வீடு அற்றவர்கள் குறித்து சென்னையில் 18 இடங்களில் அண்மையில் ஆய்வு நடத்தியது. சென்னையில் 256 குடும்பங்களுக்கும் 1,200 தனி நபர்களுக்கும் மேற்பட்டோர் வீடு இன்றி இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.